Saturday 29 August 2015

வீட்டுக்குறிப்புகள் !!!

1. ஃப்ளாஸ்க்கைத் திறக்கும்பொழுது வரும் வாடையை நீக்க அதில் ஒரு தேக்கரண்டி சர்க்கரையைப் போட்டு மூடி வையுங்கள்.
2. முட்டைக்கோஸ், காலிஃப்ளவர் ஆகியவற்றை வேக வைக்கும்பொழுது, கூட ஒரு துண்டு எலுமிச்சை சேர்த்து வேக வைத்தால் நிறமும் மாறாது, சுவையும் கூடும்.
3. பூரி - கிழங்கு, காய்கறிக் குருமா செய்யும்பொழுது வெங்காயம் போதாமல் போய்விட்டால் கவலை வேண்டாம்! முழுவதும் வெங்காயம் போடுவதற்குப் பதிலாக முட்டைக்கோசையும், வெங்காயத்துடன் கலந்து போட்டால் சிறிதும் வித்தியாசம் தெரியாது.
4. உருளைக்கிழங்கை நன்றாக அரைத்துச் சாறு எடுத்து வைத்துக் கொண்டு, காலில் தடவினால் வெடிப்புகள் மறைந்து மென்மையாகும்.
5. துளசி கொதிக்க வைத்த நீரில் சுக்கு தட்டிப் போட்டு, தேன் கலந்து, காலை நேரத்தில், வெறும் வயிற்றில் பருகி வந்தால் மலச்சிக்கல் நீங்கி, இரத்த ஓட்டம் சீரடைந்து தேகம் ஆரோக்கியமாகவும், வனப்பாகவும் இருக்கும்.
6. கார வகைகள் செய்யும்பொழுது வெண்ணெய்யும், ஸ்வீட் வகைகளுக்குச் சுத்தமான நெய்யும் சேர்த்துச் செய்தால் மிக மிகச் சுவையாக இருப்பதோடு, அதிக நாள் கெடாமலும் இருக்கும்.
7. கார வகைகளுக்கு மாவு பிசையும்பொழுது ஒரு கப் தேங்காய்ப்பால் சேர்த்துப் பிசைந்தால் தேங்காய் எண்ணெய்யில் செய்தவை போலச் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.
8. கோதுமை மாவைக் கரைத்து பஜ்ஜி பொரித்தால் வித்தியாசமாகவும், சுவையாகவும் இருக்கும்.
9. தனியாவையும், தேங்காயையும் சிறிது வறுத்துப் பொடி செய்து வைத்துக் கொணடு தேவையானபொழுது சாம்பாரில் போட, சாம்பார் மணக்கும்.
10. புடலங்காய் விதைகளை நன்றாக வெயிலில் வைத்து விட்டு, சிறிது எண்ணெய்யில் உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு, சில மிளகாய்கள் ஆகியவற்றைப் போட்டு வறுத்து எடுத்துக் கொண்டு, இத்துடன் கொஞ்சம் உப்பு, பெருங்காயம் சேர்த்துப் பொடி செய்து, சுடு சாதத்துடன் நெய் கலந்து உண்ண பருப்புப் பொடி, பூண்டுப் பொடி போலச் சுவையாக இருக்கும்.
11. உணவு செரிக்காமல் நெஞ்சைக் கரிக்கும்பொழுது, ஒரு சிறு துண்டு எலுமிச்சம்பழத் தோலைக் கடித்து உண்ண, சரியாகும்.
12. வைட்டமின் ஏ, சி குறைவினால் வறண்ட சருமத்திற்கு, உணவில் கடலை, நெல்லிக்காய், கீரை, ரோஜா இதழ் சேர்த்து உண்ண, குறை நீங்கும்.
13. பித்தளை விளக்கை, விபூதியும் மண்ணெண்ணெய்யும் சேர்த்துத் துடைத்து பிறகு உலர்ந்த துணியினால் துடைக்க, பளீரிடும்.
14. நெய் காய்ச்சிய பாத்திரத்தில், அரை மூடி துருவிய தேங்காயுடன் ஒரு கப் பாலும், சர்க்கரையும் சேர்த்துக் கொதிக்க வைத்து பர்பி செய்து துண்டுகள் போட, மிக நன்றாக இருக்கும்.
15. நான்கைந்து செம்பருத்தி இலைகளுடன் உப்பு, சாம்பல் வைத்துத் தேய்க்க, பித்தளைப் பாத்திரங்கள் மின்னும்.
16. முள்ளங்கியையும், வாழைத்தண்டையும் சிறிய துண்டுகளாக்கி எலுமிச்சை ரசம், உப்பு சேர்த்து வெறும் வயிற்றில் உண்டால் ஊளைச் சதை குறையும்.
17. தீக்காயத்திற்கு, தேங்காய் எண்ணெயுடன் சிறிது சுண்ணாம்பைச் சேர்த்துத் தடவ, விரைவில் குணமாகும்.
18. அரைக் கிலோ கடுகெண்ணெயில் சிறிது கற்பூரத்தையும், 10 - 15 பூண்டுப் பற்களையும் நசுக்கிப் போட்டுக் காய்ச்சி எடுத்து வைத்துக் கொண்டால் கை கால் வெடிப்பு, பெரியவர்களின் மூட்டு வலி, குழந்தைகளின் நெஞ்சுச் சளி ஆகியவற்றுக்கு லேசாகச் சூடுபடுத்தித் தேய்க்க, குணமாகும்.
19. பீட்ரூட்டைத் தோல் சீவி, நன்றாகக் கழுவிச் சிறு துண்டுகளாக்கி, பச்சை மிளகாய்களுடன் வதக்கி உப்பு, புளியுடன் சேர்த்து அரைக்க மிகவும் சுவையான பீட்ரூட் துவையல் தயார்.
20. அடை மாவில் ஒரு கப் ஜவ்வரிசி கலந்து சுட, அடைகள் முத்து முத்தாக, பார்க்க அழகாகவும், சுவையாகவும் இருக்கும்

Friday 28 August 2015

திருமணத்தேதி

திருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் எந்த தேதியில் பிறந்தவர்களானாலும் திருமணத்தேதி கூட்டு எண் 2,4,5,7,8, வராமல் பார்த்து செய்வது நலம்கொள்ள‍ வேண்டிய விதிகள்
1. முதல் விதி
திருமணம் மல மாதத்தில் இடம்பெறக்கூடாது. (மலமாதம் என்பது
இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமி ஒரே மாதத்தில் வருவது.)
2. இரண்டாவது விதி
சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, தை, பங்குனி தவிர இதர மாதங்களில் திருமணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.
3. மூன்றாவது விதி
இயன்றவரை சுக்கில பட்ச காலத்திலேயே திருமணம் செய்வது நல்லது என்பது மூன்றாவது விதி.
4. நான்காவது விதி
புதன், வியாழன், வெள்ளிபோன்ற சுப ஆதிபத்தியமுடைய கிழமைகள் மிக ஏற்றவை. இதர கிழமைகள் அவ்வளவு உகந்தவை அல்ல.
…ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகிய சுப லக்கினங்களில் மட்டுமே திருமணம் நடத்த வேண்டும் என்பது தான்
5. ஐந்தாவது விதி
துவிதியை, திரிதியை, பஞ்சமி, ஸப்தமி, தசமி, திரயோதசி ஆகிய சுப திதிகள் தவிர இதர திதிகளை தவிர்ப்பது
6. ஆறாவது விதி
முகூர்த்த லக்கினத்துக்கு 7ம் இடம். முகூர்த்த நாளன்று சுத்தமாக இருக்க வேண்டும்.
7. ஏழாவது விதி
அக்கினி நட்சத்திரம், மிருத்யூ பஞ்சகம், கசரயோகங்கள் போன்ற காலகட்டத்தில் திருமணம் நடத்தக்கூடாது.
8. எட்டாவது விதி
திருமணத்தின் போது குரு, சுக்கிரன் போன்ற சுபகிரகங்கள் திருமண லக்கினத்துக்கும் மணமக்களின் ஜனன ராசிக்கும் எட்டாம் வீட்டில் இடம் பெற்றிருக்கக்கூடாது.
9. ஒன்பதாவது விதி
திருமணநாள் மணமக்களின் சந்திராஷ்டம தினமாக இல்லாமல் இருப்பது மிகமிக முக்கியமான விதி.
10. பத்தாம் விதி.
மணமக்களின் ஜனன நட்சத்திர நாளிலும் 3, 5, 7, 12, 14, 16, 21, 23, 2வதாக வரும் நட்சத்திர தினங்களிலும் திருமணம் நடத்தக்கூடாது.
11. பதினொன்றாம் விதி
கடைசியாக மணமக்களின் பிறந்த தேதி அல்லது கிழமைகளிலும் கல்யாணம் பண்ணக்கூடாது.
- இவ்வளவு விஷயங்கள் தெரிந்து கொண்டபின் நீங்களே அனைத்து சுபகாரியங்களுக்கும் நல்ல நாள் பார்த்துவிடுவீர்கள் தானே. அவரவர் குலதெய்வத்தை மனதில் வேண்டிக்கொண்டு உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆசியுடன் நல்லதொரு நாளைக்
குறியுங்கள்.

Saturday 1 August 2015

நீங்கள் எந்த அளவு அதிர்ஷடசாலி..??

இதைப் படிப்பதால்.. உங்கள் வாழ்க்கை
முறை.. கவலைகள் பழக்க வழக்கங்களில்
கூட மாற்றம் ஏற்படலாம்..!!
* உண்ண உணவும்..
உடுத்த உடையும்..
வசிக்க இடமும்
உனக்கு இருந்தால்..
உலகில் உள்ள 75% மக்களை விட.. நீ வசதி
பெற்றிருக்கிறாய்..!!
* வங்கியில் பணமிருந்தால்.. அவ்வாறு
உள்ள 8% பணக்காரர்களுள்.. நீயும்
ஒருவன்..!!
உலகில் உள்ள 80% மக்களுக்கு
வங்கி கணக்கே இல்லை..!!
* உன்னிடம் கணிப்பொறி இருந்தால்..
நீ அவ்வாறு வாய்ப்பு பெற்ற.. 1%
மனிதர்களுள் ஒருவன்..!!
*நினைத்த நேரத்தில்.. நினைத்த நபருடன்
மொபைலில் உன்னால் பேச
முடிந்தால்.. அவ்வாறு வாய்ப்பே
இல்லாமல் இந்த உலகில் இருக்கும்.. 175
கோடி மக்களை விட நீ மேலானவன்..!!
*நோயின்றி காலையில்..
புத்துணர்வுடன்
நீ எழுந்தால்.. அந்த
வாய்ப்பற்று இரவு
படுக்கையிலையே.. உயிர் துறந்த
பலரை விட..
நீ பாக்கியசாலி..!!
* பார்வையும்,, செவித் திறன்,, வாய் பேசாமை.. உள்ளிட்ட எந்த
குறைபாடுகளும் இல்லாது
நீ
இருந்தால்.. அவ்வாறு உள்ள உலகில்
உள்ள 200 கோடி மக்களை விட நீ நல்ல நிலையில் இருக்கிறாய்..!!
* போர், பட்டினி, சிறைத் தண்டனை
போன்ற சித்ரவதையில் நீ சிக்காமல்
இருந்தால்.. உலகில் உள்ள 70 கோடி மக்களுக்கு கிடைக்காத நல்ல வாழ்க்கை
அமைந்துள்ளது என அறிந்து கொள்..!!
*கொடுமைகளுக்கு உள்ளாகாமல்..
நீ விரும்பும் தெய்வத்தை தொழ
முடிந்தால்.. உலகில் உள்ள 300 கோடி
மக்களுக்கு கிடைக்காத சலுகையை
நீ பெற்றுள்ளாய்..!!
* உன் பெற்றோரை பிரியாமல்
அவர்களுடன் இருந்தால்.. நீ துன்பத்தை
அறியாதவன் என்பதை புரிந்து கொள்..!!
* தாகம் எடுத்தால் குடிப்பதற்கு..
உங்களுக்கு தண்ணீர் கிடைக்கிறதா..?
அப்படியெனில் நீங்கள் கொடுத்து
வைத்தவர் தான்..!!
ஏனெனில் உலகம் முழுதும்.. சுமார் 100
கோடிக்கும் அதிகமான மக்களுக்கு..
பாதுகாப்பான தண்ணீர் குடிப்பதற்கு
இல்லை..!!
* கல்வி அறிவு பெற்று.. இந்த
செய்தியை உன்னால் படிக்க
முடிந்தால்.. அவ்வாறு செய்ய இயலாத
80 கோடி பேர்களுக்கு கிடைக்காத
கல்வியை
நீ பெற்றுள்ளாய்..!!
* உலக அளவில் எழுத படிக்க தெரியாத..
மக்களின் எண்ணிக்கை மட்டுமே 80
கோடிக்கும் மேல்..!!
* இணையத்தில் இந்த செய்தியை..
உன்னால் படிக்க முடிந்தால்.. அது
கிடைக்காத 300 கோடி மக்களை விட நீ
மேலானவன்..!!
* உன்னால் தலை நிமிர்ந்து நின்று
சிரிக்க முடியுமானால்.. அவ்வாறு
செய்ய இயலாத அளவுக்கு
தைரியமும்.. நம்பிக்கையும்
இல்லாதவர்களை விட..
நீ கொடுத்து
வைத்தவன்..!!
* நீங்கள் அனுபவித்து வரும்..
வசதிகளையும்.. தொழில் நுட்பத்தையும் அனுபவிக்க இயலாமல்.. ஏன் அது
பற்றிய அறிவு கூட இல்லாமல்..
கோடிக்கணக்கானோர் இவ்வுலகில்
இருக்க.. ஆண்டவன் இவ்வளவு விசயம்
உங்களுக்கு.. கொடுத்திருக்கும் போது..
நீங்கள் அதிர்ஷடசாலி
இல்லையா பின்ன..??
* நீங்கள் அதிர்ஷடசாலி தான்..!!
வீண் கவலைகளை விட்டு..
அந்த
கவலைகளை காரணம் காட்டி
குடும்பத்தில் குழப்பங்கள்.. போதை
பொருட்கள்.. என்பவற்றை விட்டு.. விட்டு
நான் அதிர்ஷடசாலி என்ற
தைரியத்தோடு.. இயன்றவரை
மற்றவர்களுக்கு உங்களால் முடிந்த வரை
உதவுங்கள்..!!
உங்கள் வாழ்க்கை மேலும் அழகாகும்..!!